ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை மார்ச் 25,2026 தினத்தன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.