உள்நாடு

ஜப்பானில் ஜனாதிபதி அனுர; பல்வேறு நிகழ்வுகளில் இன்று பங்கேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டதையடுத்து, இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது ஜப்பானிய பேரரசரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் பிரதமருடன் உச்சிமாநாட்டு சந்திப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில், ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில், ‘எக்ஸ்போ 2025 ஒசாகா’ கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவதுபொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அங்கிருந்து ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *