உள்நாடு

நா உயனவில் கேபிள் கார் விபத்து; ஏழு பிக்குகள் பலி

மெல்சிரிபுராவில் உள்ள பன்சியகமவில் உள்ள நா உயன மடாலயத்தில் (நா உயன ஆரண்ய சேனாசனய) நடந்த கேபிள் கார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

இறந்த துறவிகளில் குறைந்தது இரண்டு பேர் வெளிநாட்டு பிரஜைகள் எனவும், அவர்களின் உடல்கள் கோகரெல்லா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய துறவிகளின் உடல்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த நேரத்தில் 13 பௌத்த துறவிகள் கேபிள் காரில் சவாரி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த துறவிகள் இப்போது குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *