உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *