அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் போதையற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் சர்வமத குழு உறுப்பினர் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் சமூக நலன்விரும்பிகள் இணைந்து ஜம்இய்யாவின் காரியாலயத்தில் சனிக்கிழமை 20.09.2025 Puttalam Bar Association வழக்கறிஞர்களுடன் போதை அற்ற சமூகத்தை உறுவாக்க வேண்டும் எனும் தலைப்பில் கலந்துறையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வை ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி தொகுத்தார்.
சூரத்துல் பாதிஹாவுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹியினால் தலைமை உறை நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிஷார் போதையற்ற சமூகத்தை உறுவாக்க அரசியல் ரீதியாக பல உதவிகளையும் மேல் அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்க்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை கூறினார்.
அதன் பின்னர் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்கார் மற்றும் முர்ஷித், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் நஜீம், முன்னாள் பாத்திமா பெண்கள் பாடசாலையின் உப அதிபர் நிஜாம் மூலமாக போதையற்ற சமூகத்தை உறுவாக்க ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து Puttalam Bar Association தலைவர் சட்டத்தரணி எம்.என்.எம். நத்வி போதையற்ற சமூகத்தை உறுவாக்க சமூக ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்தினார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணி அஷ்ரக் நாட்டின் சட்டதிட்டங்களை தெளிவுபடுத்தினார்.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக புத்தளம் சமூகத்திற்கு பல சேவைகளை செய்து கொண்டு வரும் Puttalam Bar Association தலைவர் எம்.என்.எம். நத்விக்கு ஊர்தலைமைகள் ஒன்றாக இணைந்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நன்றியுரை உபசெயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
கப்பாரத்துல் மஜ்லிஸ் துஆவுடன் கூட்டம் முடிவடைந்தது.




ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ
புத்தளம் நகரக்கிளை