ஐ.நா பொதுச்சபையில் புதனன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி அநுர
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
அரச தலைவராக தனது முதல் ஐ.நா. பொதுச் சபை உரை யில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.