உள்நாடு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாளை கொழும்பில்

தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு பாராட்டு மற்றும்
இசைமுரசு இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா செப்டம்பர் 19-ந் தேதி இலங்கை கொழும்பில் நடைபெறுகிறது.

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்"" என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின்தகைசால் தமிழர்”” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகி தீனுக்கான பாராட்டு நிகழ்வு , இசை முரசு மர்ஹூம் நாகூர் இ.எம் .ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் மகுட விழாவாக 19-09-2025 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், லோட்டஸ் அரங்கில் நடைபெறவுள்ளன .

பாராளுமன்ற உறுப்பினர் களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்ஸில் ஆப் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் முன்னிலை வகிக்க வுள்ள இந்நிகழ்வுக்கு இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக பங்கேற்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் மற்றும் இசைமுரசு மர்ஹூம் நாகூர் இ.எம்.ஹனிபா ஆகியோரின் சிறப்புகள் பற்றிய கருத்துரைகள் இடம் பெறவுள்ளதோடு, அவர்கள் தொடர்பான காணொ ளிகளும் காட்சிப்படுத்தப் படவுள்ளன.
தீனிசைப் பாடல் அரங்கில், மர்ஹூம் இ.எம்.ஹனிபாவின் பாடல்களை தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ், இ.யூ. முஸ்லிம் லீக் தலைமை நிலைய பாடகர் தமிழ் மாமணி தேரிழந்தூர் தாஜுதீன், இலங்கைப் பாடகர் களான மருதமுனை கமால், இசைச்சுடர் கலைக்கமல் ஆகியோர் இசைக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வுகளில் கௌரவ அதிதிகளாக,இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி, தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதுவர் கலாநிதி கணேசநாதன் கேதீஸ்வரன் ,தமிழக சட்டமன்ற நாகபட்டினம் தொகுதி உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், இலங்கை தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ சுமந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஜி. எம் .அக்பர் அலி, பெருநகர சென்னை மாநகராட்சி கவுன் ஸிலர் (எழும்பூர்) பாத்திமா முஸப்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில் அயலக அதிதிகள் பிளாக் துலிப் குழுமத்தின் நிறுவனர் ஆ. முஹம்மது எஹியா, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் முனைவர் கே.என். அப்துல் நிஹால், சிங்கப்பூர் ராயல் சிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ்.எஸ். சிராஜுதீன், நிர்வாக இயக்குனர் செல்வதுரை ஹால்மன், மணிச்சுடர் ஊடக வியலாளார் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது, ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.ஏ.தாவூத் பாட்சா, மலேசியா ஆடிட்டர் நிஜாம் மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மாநில துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, எம்ஜே.எம். ஜமால் முஹம்மது இப்ராஹிம், மேலப்பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார், திருநெல்வேலி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், தென்சென்னை மாவட்ட தலைவர் மடுவை எஸ்.பீர் முஹம்மது, தென்காசி மாவட்ட செயலாளர் வி.எம். செய்யது பட்டாணி, மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் புளியங்குடி முஹம்மது அல்அமீன், மண்டல செயலாளர் நாகூர் சாஹா மாலிம், திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் முஹம்மது இலியாஸ் ஆகியோர் அயலக அதிதிகளாக பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வுகளில் தமிழகம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா ஆகியவற் றிலிருந்தும், இலங்கையி லிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், கல்விமான் களும், தொழிலதிபர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் .தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் அதிதிகளை ஒருங்கிணைப்பதில் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது ஒத்துழைப்பு வழங்கியுள்ள தாகவும் விழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கொழும்பில் வருகிற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்படுகிறது இந்த ஆவணப் படத்தை சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குடும்பம் குழுமத்தின் நிறுவனர் ஹாஜி சிராஜுதீன் பெருமையுடன் வழங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஹாஜி என் எம் அமீன் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் நாளிதழின் மூத்த ஊடகையாளர் திருச்சி எம் கே சாகுல் அமீது ஆகியோர் தயாரிப்பில் இந்த ஆவணப் படத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவில் செழியன் பிளாக் துலிப் குழுமத்தின் நிறுவனர் ஹாஜி முஹம்மது எஹியா ஆகியோர் ஆவண படத்தை வெளியிடுகிறார்கள்.

அயலக அதிதிகள்
பிளாக் துலிப் குழுமம் நிறுவனர் ஆ. முஹம்மது எஹியா, திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமம் நிறுவனர் ஹாஜி எஸ். எஸ். சிராஜுதீன், சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமம் நிறுவனர் செல்வதுரை ஹால்மன், ஊடகவியலாளர், மணிச்சுடர் மக்கள் குரல் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது, ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்கள் நிறுவனர் டாக்டர் எம்.ஏ. தாவூத் பாட்சா, இ.யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மலேசியா ஆடிட்டர் நிஜாம் மைதீன், இ.யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, இ.யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைச் செயலாளர் எம்.ஜே.எம். ஜமால் முஹம்மது இப்ராஹிம், இ.யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைச் செயலாளர் மேலப்பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார், இ.யூ. முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், இ.யூ. முஸ்லிம் லீக் சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மடுவை எஸ். பீர் முஹம்மது, இ.யூ. முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டச் செயலாளர் வி.எம். செய்யது பட்டாணி, இ.யூ. முஸ்லிம் லீக் சென்னை மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் புளியங்குடி எம். முஹம்மது அல்அமீன், இ.யூ. முஸ்லிம் லீக் தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் நாகூர் ஆ. சாஹா மாலிம், முஸ்லிம் யூத் லீக் திண்டுக்கல் மாநகராட்சி, தேசிய செயலாளர் முஹம்மது இலியாஸ் எம்.சி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *