ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம்
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணமானார்
இலங்கையில் உள்ள சீன தூதரகத்தினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இளம் தலைவர்களுக்கான செயலமர்வில் பங்கு பெற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று சீனா பயணமானார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முதுநபீன் முஷாரப் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே சீனா பயணமானார்.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எல் .ஏ. எம் .ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளர் றஹ்மத் மன்சூர் ஆகியோருக்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
