உள்நாடு

ஐந்து வளவாளர்களால் 100 மாணவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சிகள்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது ஊடக செயலமர்வு மற்றும் கம்பஹா மாவட்ட 20 பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்கிய பல்லூடக கருத்தரங்கு, நீர்கொழும்பு – கொச்சிக்கடை போருதொட்ட அல் – பலாஹ் கல்லூரியில் (17) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என்.எம். அமீன், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.ஜே.எம். தாஜுத்தீன் ஆகியோரின் இணைத் தலைமையில் நிகழ்வுகள் ‘காலை அமர்வு – மாலை அமர்வு’ என இருவேறு அமர்வுகளாக இடம்பெற்றன.
காலை அமர்வில், “விடிவெள்ளி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன், அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்சித் திட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் ஆகியோர் வளவாளர்களாகப் பங்கேற்றனர்.
இதன்போது, பாடசாலை மாணவ மாணவிகள் மத்தியில் ஊடகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நவீன உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாடசாலைகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தல் அல்லது அறிக்கையிடல், என்பன தொடர்பான வழிகாட்டல் பயிற்சிகள் வளவாளர்களால் வழங்கப்பட்டன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *