உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரலியா,காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல்,தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *