அமானத் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி 18ஆம் திகதி ஆரம்பம்
பேருவளை மருதானை அல் அமானத் பாலர் பாடசாலை வருடாந்தம் நடாத்தும் பெற்றோர்களுக்கான அமானத் வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிகட் சுற்றுப்போட்டி நாளை 18ம் திகதி திங்கட்கிழமை இரவு 8.00 மணிக்கு பேருவளை ஹெட்டிமுல்ல பெர்கோ புட்சல் மைதானத்தில் ஆரம்பமாகும்.
8 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதுடன் அன்றைய தினம் கிண்ணம் அறிமுக நிகழ்வும் இடம்பெறும்.
மேற்படி பாடசாலையின் பணிப்பாளர் டில்சாத் அன்வர், அதிபர் பஸ்லா முர்ஸி் ஆகியோர் தலைமையில் இடம் பெறும் ஆரம்ப நிகழ்வில் பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், பேருவளை பிரதேச சபை தலைவர் பைஸான் நைஸர், பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஆர். நவரத்ன, கொஸ்கொட பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சாமிந்த சில்வா, சீனன் கோட்டை இரத்தினக் கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க முகாமையாளர் மபாஸ் மசூர், கொழும்பு ரிபோன் நிறுவன சந்தைப் படுத்தல் முதாமையாளர் ஸப்ரி ஸவாஹிர், பேருவளை அமானா வங்கி கிளையின் முகாமையாளர் இர்சாத் நஸீல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
பிலஷ் பெல்கன் அணிக்கு இல்ஹாருல் ஹஸன் ஸுபுகியும், ரெட்வூட் ரொகட் அணிக்கு டாக்டர் மஸ்ஹர் முஹம்மதும், மைட்டி லயன் அணிக்கு ஹனான் நஸ்ருதீனும், த ஒக்வோரியல் அணிக்கு ரிஸ்மின் தாவூதும், தண்டஸ் டைகர்ஸ் அணிக்கு லரீப் தாஹிரும், வைல்ட் டைகர்ஸ் அணிக்கு ரியால் நிஸாமும், பிளக் பெந்தர்ஸ் அணிக்கு பவாஸ் ரிபாயும், ஸில்வர் ஸ்டோர்மஸ் அணிக்கு இர்பான் பாரூக்கும் தலைமை தாங்குகின்றனர்.
இந்த நிகழ்வில் மேலும் பல பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிசியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)