உள்நாடு

பிரதேச பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாது உடனடித் தீர்வு வழங்க உரிய அதிகாரிகளுக்கு ஆதம்பாவா எம்.பி.பணிப்புரை..!

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் (14) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஏ. தர்மதாஸ், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு கடந்த காலங்களில்  இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றனவா? என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது.

மேலும் இப்பிரதேச செயலக பிரிவிலுள்ள குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, யானை வேலி அமைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது டன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *