உள்நாடு

லொறி பேரூந்து விபத்தில் 10 பேர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இன்று (15) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி எல உடுவர பகுதியைச் சேர்ந்த குழுவொன்றை ஏற்றிச் சென்ற தனியார் யாத்திரை பேருந்து, கண்டி நோக்கிச் சென்றபோது, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *