பல மாவட்டங்களில் மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தெற்கு மாகாணங்கள், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.