கற்பிட்டியில் பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களுடன் இருவர் கைது
இலங்கை கடற்படையினர் கற்பிட்டி சேராக்குளி கலப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 1180 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்களுடன் இருவரையும் இரண்டு டிங்கி படகுகளையும் செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தில் உட்பட சட்ட விரோத நடவடிக்கைளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கி கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் கற்பிட்டி சேராக்குளி களப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி சட்ட விரோத பொருட்கள் சந்தேக நபர்களுடன் டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட வழக்கறிஞர்களுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்கள் சந்தேக நபர்கள் புத்தளம் மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)