உள்நாடு

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம்
071 – 8598888
என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும்.
இந்த இலக்கம் ஊடாக, நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு குறுஞ்செய்திகளையும், வீடியோக்கள் மற்றும் படத்தொகுப்புக்களையும் அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும்.
அழைப்புக்களை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக, தங்களது பிரச்சினைகள் மற்றும் தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *