உள்நாடு

பொரள்ளை விபத்தில் ஒருவர் பலி..!

பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *