தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..!
இளையராஜாவின் பக்தி இசை குழுவினர் பாடிய ஓம் சிவோஹம் பாடலை பிரதமர் நரேந்திர மோடி தாளம் போட்டு ரசித்தார். பின்னர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இலங்கை, மாலத்தீவு, தென் கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.
தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா தொடங்கியது. இந்த நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
முதலாம் ராஜேந்திர சோழ மன்னன், தன் தந்தை ராஜராஜன் கட்டிய கோவிலை போலவே கட்டிய கோவில் தான், அரியலுார் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில். கங்கையை வெற்றி கொண்டதன் நினைவாக இந்த நகரம் உருவாக்கி, அதை தன் தலைநகராக மாற்றினார் ராஜேந்திர சோழன். அந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திர சோழன் நாணயம் வெளியிடும் விழா மற்றும் ஆடித்திருவாதிரை விழா, ராஜேந்திரன் வெற்றிகளை கொண்டாடும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பிரதமர் மோடி, கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள், ஆதினங்கள், ஆன்மிக பெரியோர், பொதுமக்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில், ஓதுவார்களின் தேவார திருமுறை பாராயணம் நடந்தது.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!
தொடர்ந்து இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. குழுவினர் பாடிய ஓம் சிவோஹம் பாடலை பிரதமர் மோடி தாளம் போட்டு ரசித்தார். பாடல் முடிந்ததும், மோடி எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள, ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ பாடலை, குழுவினர் பாடினர். அதையும் மோடி பக்தி பரவசத்துடன் கேட்டு ரசித்தார்.தஞ்சைக்கு வந்த பிரதமர் மோடி, தமிழக முறையிலான பாரம்பரிய உடை அணிந்து காணப்பட்டார். அவர், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தும், தோளில் அங்கவஸ்திரமும் அணிந்து காணப்பட்டார். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இறை வணக்கம் செலுத்தியதுடன், ஆடி திருவாதிரையை முன்னிட்டு, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.பட்டப்பெயர்கள், துணை பெயர்களை வைத்து நாணயங்களை வெளியிட்டவர் ராஜேந்திர சோழன். அதிக தங்க நாணயங்களை வெளியிட்டவர். பல்லாயிரம் பொன் நாணயங்களை வெளியிட்ட பேரரசருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், சோழர்கள் பெருமையை பறைசாற்றும் வகையிலும், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது : வணக்கம் சோழமண்டலம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற திருவாசக பாடல் வரியை கூறி தனது பேச்சை தொடங்கினார்.
முப்பெரும் விழா ஆன்மிக அணுபவமாக இருந்தது என்று ராஜாஜ சோழனின் மண்ணில் இளையராஜாவின் பாடல் சிவ பக்திமயமாக இருந்தது. சிவன் தரிசனம், இளையராஜாவின் இசை ஆன்மிக அனுபவமாக இருந்தது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பக்தி நிறைந்ததாக அமைந்தது. என் விருப்பமெல்லாம் சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தான். இந்த பக்திமயமான தருணம் என் மனதை ஆனந்தம் அடைய செய்தது.
சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. பாரத நாட்டின் வளர்ச்சிக்காக என் வேண்டுதலை சிவனிடம் வைத்தேன். 1000 ஆண்டுகள் நிறைவுசெய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கை கொண்ட சோழப்புரம் குறித்த கண்காட்சியை கண்டு வியந்தேன்.
இளையராஜாவின் சிவ பாடல்கள் மழைக்காலத்தில் பக்தி நிரம்பியதாக இருந்தது. காசியின் பிரதிநிதியான இந்த சிவ கோஷம் புல்லரிப்பை தருகிறது. 140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன். ராஜராஜன், ராஜேந்திரன் இரு பெயர்கள் பாரதத்தின் அடையாளம். சிவனை வணங்குபவர் சிவனிலேயே கரைந்து விடுகிறார். பெருவுடையாரை வணங்க கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு. இலங்கை, மாலத்தீவு, தென் கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு. பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாம்ராஜ்ஜியம், ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.
சோழர் ஆட்சி காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற்றது. திருமூலரின் வழியில்தான் இன்று பயணம் செய்கிறது இந்தியா; ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்; சோழர்களின் கருத்துகளை, எண்ணங்களை எமது அரசு முன்னெடுத்துச் செல்கிறது; சோழ அரசர்கள் நாட்டை கலாச்சாரம் மூலம் ஒன்றிணைத்தனர்
தமிழ் கலாச்சாரத்துடன் இணைந்த புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது. சோழர்களை போல் காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. நடராஜரின் ஆனந்த தாண்டவம் தத்துவங்களின் வெளிப்பாடு ஆகும்.
இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கும் முன்னோடிகள் சோழர்கள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திரன். காவிரி கரைக்கு கங்கை கரையில் இருந்து வந்துள்ளேன். ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து பொன்னேரியில் நிரப்பினார். நான் காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரி கரைக்கு கங்கை நீரைக்கொண்டு வந்திருக்கிறேன். காசியில் இருந்து இங்கு கங்கை நீரை எடுத்த வந்தது எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழீஸ்வரம். உலகம் முழுவதும் பேசும் நீர்மேலாண்மைக்கும் சோழர்களே முன்னோடிகள். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம். அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை. இன்றைய பாரதம் அதன் கடந்த கால வரலாறுகளால் பெருமிதம் கொள்கிறது. அன்பே சிவம் என்றார் திருமூலர், இதை கடைபிடித்தால் உலகின் சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமூலரின் வழியின்தான் இன்று பயணிக்கிறது இந்தியா. களவாடப்பட்ட கலைச் சின்னங்களை மீட்டுள்ளோம். இதில் 36 தமிழகத்தைச் சேர்ந்தவை.
சோழ அரசர்களின் அரசியல், வனிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.
பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது. நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கை கொண்ட சோழப்புரம். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம்.
ராஜராஜன், ராஜேந்திரன் சக்தி வாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்தார்கள். சக்திவாய்ந்த அக்கடற்படையை விஸ்தரித்தார் ராஜேந்திரன். பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூர். இந்தியா முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் உதாரணம். புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழ சாம்ராஜ்ஜியம். தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட
சிலை அமைக்கப்படும். பெரும் அறிவிப்பை வெளியிட்டு முப்பெரும் விழாவில் இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
விழாவில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், தொல். திருமாவளவன் எம்.பி. , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)







