உலகம்

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கையை சேர்ந்தவர் கைது..!

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டது. அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகர் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த நபர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணைக்குப்பிறகு அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *