Sunday, July 27, 2025
Latest:
உள்நாடு

எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பீ.க்கள் தேசிய சூரா சபையினர் சந்திப்பு..! முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வு..!

தேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், M.L.A.M.ஹிஸ்புல்லாஹ்,M.S.உதுமான் லெப்பை, நிஸாம் காரியப்பர்,முஜீபுர் ரஹ்மான்,கபீர் ஹாஷிம்,M.M. தாஹிர்,இஸ்மாயில் முத்து மொஹமட், K.காதர் மஸ்தான், M.S.வாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர், பொதுச் செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் மற்றும் முன்னை நாள் தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். பளீல் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றியதுடன் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் செயலக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *