உள்நாடு

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க விசாரணைக் குழு தீர்மானம்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவரை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் அந்த குழு சிபாரிசு செய்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளதால், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *