உள்நாடு

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (22) முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த மசோதா மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று விவாதிக்கப்பட உள்ளன.

நிறுவனங்கள் திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (23) நடைபெற உள்ளது, இலங்கை மின்சார திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *