உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், சில இடங்களில் 50 மி.மீ வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும், மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *