இன்று சி.ஐ.டி இல் ஆஜராகும் கம்மன்பில
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில இன்று (17) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
சுங்க அதிகாரிகளின் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பில் பிவிதுரு ஹெல உறுமய முன்பு தாக்கல் செய்த புகாருக்கான நினைவூட்டல் கடிதம் கையளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
புகாரில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று கம்மன்பில ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.