சாய்ந்தமருது பிரதான தபாலகத்தின் அருகாமையில் உள்ள வீதி புணரமைப்பு
சாய்ந்தமருது – 07 ஆம் பிரிவில் பெரிய தபாலகத்துக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு கொங்கிரீட் இட்டு புணரமைப்பு செய்யும் பணி இன்று (17) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் PSDG திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையில் ஒன்றான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள வீதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பெயரில் (இரண்டு மில்லியன் செலவில்) முழுமையாக செப்பனிடும் பணியானது இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்செப்பனிடும் பணியில் தொழிநுட்ப உதவியாளர்(TA) மற்றும்
பாராளுமன்ற உறுப்பினருடைய காரியாலய உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இவ்வீதிக்கு கொங்ரீட் இட்டு புனரமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய, அனைவருக்கும் பொதுமக்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.






(எம்.எஸ்.எம்.ஸாகிர்)