சினிமா

ஆந்திராவைச் சேர்ந்த பிரபலநடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்..!

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவரது மறைவிற்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஜூலை 10ம் தேதி 1942ம் ஆண்டு விஜயவாடாவில் பிறந்தார். 1978ம் ஆண்டு பிரணம் கரீது தெலுங்கு திரைப்படம் மூலம் கோட்டா சீனிவாசராவ் சினிமாவில் அறிமுகமானார். 1999 – 2004ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் (வயது 83 ) தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *