கற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கடலட்டைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்ட விரோதமாக கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் 673 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகையும் வெள்ளிக்கிழமை (05) கடற்படையினர் கைப்பற்றியுள்னர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்ட விரோத நடவடிக்கைகள எதிர்த்து தீவை சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கிய கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது
அதன்படி கற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும் குறித்த நேரத்தில் செல்லுபடியாகும் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 250 கிலோ கிராம் வரம்பை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்ட விரோதமாக டிங்கி படகில் கொண்டு சென்றதாகவும் அதில் 673 கிலோ கிராம் காணப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 49 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேக நபர்கள் டிங்கி படகு மற்றும் கடலட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள ஆய்வாளரியம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)