உள்நாடு

ஈரான் தூதரகத்துக்கு நல்லெண்ண விஜயம்..!

இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம் சிவில் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.(01)
இதன் போது ஈரான் குடியரசின் தூதுவரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள் தாக்குதலுக்குள்ளான ஈரான் நாட்டின் நிலவரங்களையும், அங்குள்ள மக்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டதோடு அவர்களின் மன அமைதிக்கும் நிம்மதிக்கும் பிராத்திப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதன் போது அங்கு சென்றிருந்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உப தலைவர் எம்.எப்.றிபாஸ், தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் செயலாளர் எம்.ரீ.எம். றிஸ்வி, மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஸாம் நவாஸ் ஆகியோர் ஈரான் இஸ்ரேல் மோதலின் போது ஈரானில் உயிரிழந்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள அனுதாப பதிவேட்டில் கையொப்பமிட்டு அனுதாபத்தையும்  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *