உள்நாடு

காவத்தையில் இருவர் கடத்தி செல்லப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ஒருவருக்கு ஆபத்து..!

காவத்தை பிரதேசத்தில் நேற்று (30) இரவு இடம் பெற்ற துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவ ர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார்.இ ன்னொருவர் ஆபத்தான நிலையி ல் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காவத்தை யாயின்ன பிரதேசத்தில் இடம் பெற்ற மேற்படிச் சம்பவத்தில் வீடொன்றினுள் பலாத்காரமாக புகு ந்த நால்வர் அங்கிருந்த இருவரை ஜீப் ஒன்றில் கடத்திச் சென்று பாழ டைந்த இடம் ஒன்றில் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.எ ன ஆரம்ப விசாரணைகளில் இருந் து தெரியவந்துள்ளது

இவர்களில் இமந்த சுரஞ்சன என்ற 22 வயதான இளைஞர் ஸ்தலத்தி லேயே பலியான நிலையில் அவர து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது காயமடைந்த 27 வயதான நபர் படு காயமடைந்த நிலையில் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்

கடத்தல் மற்றும் கொலைக்கான உ றுதியான காரணத்தை அறிய விசா ரணைகள் இடம் பெற்று வருவதாக பொலீசார் தெரிவித்தனர். எனினும் போதைப் பொருள் பாவ னை தொடர்பான தகவல் வழங்கிய மை இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவல் இப்பிர தேசத்தில் பரவி வருகிறதுகொலை காரர்களை தேடி காவத்தை எந்தா ன பொலீசார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *