உள்நாடு

32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

ஒன்பது பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் 16 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்களின்படி, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, மொனராகலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது பிரதிப்பொலிஸ் மா அதிபராக பணியாற்றும் பொலிஸ்மா அதிபர் ஜே.ஆர். டயஸ், தற்போதைய கடமைகளுக்கு மேலதிகமாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் தவிர, இரண்டு பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐந்து உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *