கலாநிதி பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை 30 ஆம் திகதி
மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரையொன்று ஜுன் 30ம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
AL ASLAF FOREBEAR நினைவு மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஷூரா சபையின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் PC பங்கேற்கவுள்ளதுடன் கெளரவ விருந்தினராக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.எச்.எம். மஹீர் ஜே.பி.அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.
முக்கிய உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் எம்.எம்.எம். சபீர் நிகழ்த்தவுள்ளார்.
