டெல்அவீவ், ஹைபா மீது ஈரான் கடும் தாக்குதல்
அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
டெல்அவீவ் ஹைபா ஆகிய நகரங்கள் மீது இன்று அதிகாலை முதல் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி வரும் நாட்களில் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுமென ஈரானிய படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.