கற்பிட்டியில் சட்டவிரோத பீடி இலை பொதிகள் பொலிஸாரால் மீட்பு
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டகுளி கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொறியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது, கல்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நன்கு வெட்டப்பட்டு பதப்படுத்தப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பைகள் முதலில் லொறியில் ஏற்றப்பட்டன, பின்னர் குறைந்த சந்தை மதிப்புள்ள சிறிய மீன்கள் அடங்கிய பெட்டிகள் அதற்கு மேலே அடுக்கப்பட்டுள்ளன.
1.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 110 கிலோகிராம் பீடி இலைகள் 37 பொதிகளாக பொதிசெய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.