உள்நாடு

முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்ஹ காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற முக்கூட்டுப் படை நடவடிக்கைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (92) இன்று (13) அதிகாலை காலமானார்.

1953 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் கேடட் அதிகாரியாக இணைந்து இங்கிலாந்தில் உள்ள ரோயல் மிலிட்டரி அகடமியில் பயிற்சி பெற்ற வனசிங்க இலங்கை இராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி 1988 ஆம் ஆண்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991 நவம்பர் 19 முதல் 1993 செப்டம்பர் 06 வரை கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தளபதியாகவும், 1993 செப்டம்பர் 07 முதல் 1995 பெப்ரவரி வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றினார்.

குதிகா வனசிங்க, சசிகா வனசிங்க, தர்ஷிகா வனசிங்க, சஞ்சய வனசிங்க மற்றும் திலுகா வனசிங்க ஆகிய ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஹமில்டன் வனசிங்கவின் மனைவி ஐரா பியட்ரிஸ் வனசிங்க ஆவார். அவர் ஏப்ரல் 13, 2011 அன்று காலமானார்.
ஏனைய பிள்ளைகள் வணிகத் துறையில் ஈடுபட்டுள்ள நிலையில், சஞ்சய வனசிங்க இலங்கை இராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி, அக்டோபர் 13, 2023 அன்று இராணுவத் தளபதியாக ஓய்வு பெற்றார்.

1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி மல்வானை களுகொண்தயாவவில் பிறந்த ஹாமில்டன் வனசிங்க, களுகொண்தயாவ ஆரம்ப பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஒரு சிறந்த மாணவரானார்.

எதிர்வரும் ஞாயிற்றக் கிழமை(15) பிற்பகல் 1.00 மணிக்கு மல்வானை களுகொண்தயாவவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக உடல் வைக்கப்படும். மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 5.30 மணிக்கு முழு இராணுவ மரியாதையுடன் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

(எம் .டி .எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *