உலகம்

240 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது எயார் இந்தியா விமானம்

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணியளவில் லண்டன் புறப்பட்ட எயார் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

அஹமதாபாத்தில் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து அச்சம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *