உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொசன் போயா சோறு தன்சல்

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக பொசன் போயா சோறு தன்சல் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புதன்கிழமை இரவு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச பௌத்த மத சம்மேளனத் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட கற்பிட்டி பௌத்த நிலையத்தின் மத குரு, புத்தளம் மாவட்ட செயலாளர், மேலதிக செயலாளர், கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர், கற்பிட்டி பொலிஸ். நிலைய பொறுப்பதிகாரி, விஜய கடற்படை தளபதி, சிவில் பாதுகாப்பு முகாமின் அதிகாரிகள் மற்றும் வேல்ட்விஷஷன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களின் முழுப் பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி பொசன் போயா சோறு தன்சலுக்கு ஊர் மக்களின் பங்களிப்பும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *