பொத்தானையில் யானை தாக்கிய நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி
யானை தாக்கியதில் நபரொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து இன்று (11) நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை – மாவடிச்சேனை பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய சுலைமா லெப்பை என்பவர் பொத்தானையிலுள்ள தனது இருப்பிடத்தில் இருக்கும் போதே யானை தாக்கியுள்ளது.
இவ்வாறு யானையின் தாக்குதலுக்கான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாமாற்றப்பற்றுள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)