“உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்” இன்றும் அடிக்கல் நடும் வைபவம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று (09) திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்திலும் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், அப்பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






(எம்.எஸ்.எம்.ஸாகிர்)