உள்நாடு

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்; ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆசிரியருக்கு இடமாற்றம்

கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம், குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்புடைய அறிக்கை மேலும் கூறுகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உட்பட பொது மக்கள் இணைந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி, பாடசாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *