மே 8,9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள அதேநேரம் எதிர்வரும் 9 ஆம் திகதி தனிநபர் பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது.