உள்நாடு

“புலதிசி” இன்டர் சிட்டி ரயில் தடம் புரண்டது

இன்று (01) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், கோட்டை ரயில் நிலையம் அருகே இவ்வாறு தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 9ஆவது நடைமேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், தண்டவாளத்தில் ரயிலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *