நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை
வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபா, பௌதீக விஞ்ஞானத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் 1ஆம் நிலை பெற்று, தான் கற்ற பாடசாலைக்கும் தனது ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபாவை நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் உட்பட்ட அஷ்றக் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி, வாழ்த்துகின்றனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)