பிறை தென்படாததால் துல்கஃதஹ் மாதம் புதன் முதல் ஆரம்பம்..!
ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் நாளை ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மாலை மஹ்ரிபு தொழுகையுடன் புனித துல் கஃதா மாதம் ஆரம்பமாவதாக பிறைக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம் பெற்றது இதன்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மெளலவி புர்கானுதீன் உள்ளிட்ட உலமா சபையின் பிரதிநிதிகள, பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிநிதி ஏ.எஸ்.எம்.ஜாவித், பெரிய பள்ளிவாவசலின் பிரதிநிதிகள், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)



