பொரளையில் மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்
பொரளை கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து செயற்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்