உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள்

ஈஸ்ரர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து  பயங்கரவாதக் குழு தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தியது.

மேலும், தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிலும், தெமட்டகொடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை மையமாகக் கொண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதான மத அனுஷ்டானம் ஆரம்பிக்கவுள்ளது.

இதில் மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலை 8.45 மணிக்கு, அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *