வேற்றுமைகளை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்; பேருவளை நகர சபை வேட்பாளர் முஷ்பிர் ஷாபி
நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவானதோர் ஆணையைப் பெற்றுத் தருவார்கள் என்றும் இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி சரியான பாடத்தை கற்றுக்கொள்வார்கள் என பேருவளை நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஹெட்டியாகந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் நகர சபை உறுப்பினர் முஷ்பிர் ஷாபி தெரிவித்தார்.
பேருவளை ஹெட்டியாகந்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வேட்பாளர் முஷ்பிர் ஷாபியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர் மேலும் கூறியதாவது “நடைபெறவுள்ள இத் தேர்தலில் ஹெட்டியாகந்த வட்டார வாழ் மக்கள் னெது வெற்றிக்காக அனைத்து வேற்றுமைகளையும் மறந்து ஒருகுடையின் கீழ் ஒன்றினைந்துள்ளது குறித்து பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் என்றும் மக்களுடனே உள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது.
பேருவளை நகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்திக்கோ, மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேற்சை அணிக்கோ கையளிக்க மக்கள் தயாரில்லை எந்தவிதமான அரசியல் அனுபவமோ, நிர்வாக திறமையோ இல்லாதவர்களே இந்த இரு அணியிலும் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுபவர்கள் அனைவரும் தகுதியானவர்கள் உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்களை அறிந்தவர்கள் மிக திறமையாகவும், தைரியமாகவும் நிர்வாகத்தை முன்னெடுத்துச் சென்று மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடியவர்கள் என்றும் அவர் கூறினார்.
பேருவளை மக்கள் இந்த தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தமது வாக்குகளை பயனுள்ள வகையில் பாவிக்க வேண்டும்.தேசிய மக்கள் சக்திக்கோ, சுயேற்சை அணிக்கோ வாக்களித்து உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக்கொள்ளாதீர்கள்.
தொலைபேசிச்சின்னத்திற்கு வாக்களித்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ளுங்கள்.” என்றார்.
(பேருவளை பீ.எம். முக்தார்)