பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்பாட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று கொழும்பில்
நாளை மறுதினம் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பலஸ்தீனுக்கு ஆதரவான மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) கொழும்பு குருகெதரவில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் உற்பட தொழிற்சங்க பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமய இயக்க பிரதிநிதிகள் என பலரும் இக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர்.