உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 வெப்பநிலை வரை இருக்கும் எனவும் இதனால் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *