நீர்கொழும்பு மு.கா முக்கியஸ்தர்களுடன் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விஷேட கலந்துரையாடல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

