பிரதேச சபை தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான விசேட கூட்டம்
காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான விசேட கூட்டம் மாவடிப்பள்ளி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளருமான எம்.என்.எம்.ரனீஸ் (Ex.MPS) தலைமையில் (16) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்சபீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.









(றபாயிஸ் முஹம்மட் றிபி)